செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்..!

எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியாவிற்கு பயணமானதாகவும், நாளை அவர் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ரணில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக