ஊடகவியலாளர் ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவுக்கு சட்டமா அதிபர் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்காத நிலையில் இன்று அவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. திசைநாயகம் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார்
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்றும் பயங்கரவாதத்திற்கு துணை போனார் என்றும் குற்றம் சுமத்தியே காவல்துறையினர் ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் மீது வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், திசைநாயகம் `நியதிகளுக்கு அப்பாற்பட்ட கைதி` என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக