திங்கள், 11 ஜனவரி, 2010
இலங்கை எத்தியோப்பியாவாக மாறும் நிலை -பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா..!!
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படாத பட்சத்தில் இன்னும் இருபது வருடங்களில் இலங்கை எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடாக மாறிவிடும் என ஜனாதிபதி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைக்கப் பெற்று 60வருடங்களின் பின்னர் நாட்டில் ஏற்படவேண்டிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் இனிவரும் காலங்களில் ஏற்படப போகும் ஆபத்துகளை யாராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படாமல் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்குமானால் இன்னம் 15 20 ஆண்டுகளில் எமது பரம்பரையினர் வாழ்வதற்கான நாடு ஒன்று இல்லாது போகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார.; சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் காணப்பட்ட ஒரு காட்டு தீவைப் போல இலங்கை மாறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில் எதிர்காலத்தில் எமது பி;ள்ளைகள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்ளையடித்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவ்வாறான ஒரு நிலைக்கு இலங்கையை உட்படுத்திவிடக் கூடாது எனவும் இதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக