திங்கள், 11 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புகள் நாளை ஆரம்பம்..!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புகள் நாளையதினம் ஆரம்பமாகின்றன. நாளையும் நாளை மறுதினமும் இந்த வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு 4லட்சத்து 118பேர் தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 15ஆயிரம் அரசாங்க நிறுவனங்களிலும் வாக்களிப்புக்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4லட்சத்து 58ஆயிரத்து 164பேர் விண்ணப்பித்திருந்தபோதிலும் அவர்களில் 57ஆயிரத்து 37பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக