திங்கள், 11 ஜனவரி, 2010

யாழ்ப்பாணம் வவுனியா பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கான தனியார் பஸ் சேவைகள் ஆரம்பம்..!!

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான தனியார் பஸ்சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. இதன்பிரகாரம் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ் சேவைகளும், வவுனியாவிலிருந்து மூன்று பஸ் சேவைகளும் நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்டப் பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் பஸ்சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வடமாகாண ஆளுநர் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.45மணிக்கு ஆரம்பிக்கும் பஸ் சேவையானது 430க்கு மீண்டும் யாழ். நோக்கிச் செல்லும். அதுபோல் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கான பஸ் காலை 7மணிக்கு வவுனியாவிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி, பூநகரி வரைக்குமான ஒரு பயண சேவையும், வவுனியாவிலிருந்து கிளிநொச்சியின் ஊடாக அக்கராயன், உதயபுரம், முழங்காவில் என ஒரு பயண சேவையுமாக நாளைகாலை இச்சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக