திங்கள், 11 ஜனவரி, 2010
தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதாக மலையக தேசிய தொழிலாளர் சங்கம் நேற்று தீர்மானம்..!!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதாக மலையக தேசிய தொழிலாளர் சங்கம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சரும் மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின செயலாளருமான வீ.புத்திரசிகாமணி பேராளர்களிடம் சமர்ப்பித்ததையடுத்து பேராளர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்போது அமைச்சர்களான டி.ரி.ரத்நாயக்க, டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் அருள்சாமி ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது கருத்துரைத்த புத்திரசிகாமணி கடந்த நான்கு வருடங்களாக ஜனாதிபதி பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக