வெள்ளி, 8 ஜனவரி, 2010

சக்தி தொலைக்காட்சி அரசுக்கு எதிராக வழக்கு..!!

இலங்கையில் பல்துறைசார்ந்து வர்த்தம் புரியும் முக்கிய நிறுவங்களில் ஒன்றான மகராஜ நிறுவனத்தின் தமிழ் ஊடகப் பிரிவில் இயங்கும் சக்தி தொலைக்காட்சி அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. சக்தி தொலைக்காட்சி யாழ்க்குடா நாட்டில் ஒளிபரப்பாகும் அலைவரிசையில் அரசாங்க தொலைத் தொடர்பு திணைக்களம் அரசின் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக, அதே அலைவரிசையில், ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.
அரசின் தொலை தொடர்பு திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மகாராஜா நிறுவனம் ஐ.ரி.என் தொலைகாட்சி, சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக