2010 ஜனவரி, 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டுவார் என நெக்ஸஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 61.18 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் எனவும், ஜெனரல் சரத் பொன்சேகா 33.04 வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் எனவும் அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 5.42 வீத மக்கள் இன்னமும் தமது ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நெக்ஸஸ் நிறுவனம் 4910 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக