
விடுதலைப் புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் பிறின்ஸ்ஸ் கிரிஸ்டீனா கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 83மீற்றர் நீளமுடையதும் பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இக்கப்பல் கைப்பற்றப் பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக