வெள்ளி, 13 நவம்பர், 2009

பிரணாப் முகர்ஜி நாளை கொழும்பு வருகின்றார்.


இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காகவும் , நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முயற்சியாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தூதராக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) கொழும்பு வரவுள்ளார். வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பதிலாக கொழும்பு வரும் அவர் அதிபர் ராஜபக்சவைச் சந்தித்து முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, நிவாரண பணிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்துவார் என இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக