புதன், 14 அக்டோபர், 2009

பாரிசில் கைதுசெய்யப்பட்டிருந்த 22 புலிச் சந்தேக நபர்களுக்கும் நீதிமன்றில்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் (ஏப்ரல் 2007) anti-terrorism unit - SDAT (Sous-direction Antiterroriste) of the French Interior Ministry, இனரால் பாரிஸில் கைது செய்யப்பட்டிருந்த புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்களான றேகன், மேத்தா, உட்பட 22 பேர் நேற்று பிரான்ஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் கழகம் எனும் பெயரில் இயங்கிவந்த இவர்கள், பிராண்ஸ்வாழ் 75000 தமிழ் மக்களிடம் மாதாந்தம் 5 மில்லியன் யூரோக்களை கப்பமாக பெற்று வந்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாரிய குற்றங்களை புரிந்தமை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி புரிந்தமை, பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்காக நிதிசேசரித்தை போன்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, Gilles Piquois அவர்கள் தமது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது, புலிகள் இயக்கம் 2007ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என தெரிவித்திருந்தார். பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு நிதி சேகரிப்பு, அவ்வியக்கத்திற்கு நிதி வழங்கியுள்ளமை, அவ்வியக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை நின்றமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாலேயே, சட்டத்தரணி, தனது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக