செவ்வாய், 22 செப்டம்பர், 2009

வட மாகாண வீரர்கள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி விரைவில் யாழ்ப்பாணத்தில்: அமைச்சர் டக்ளஸ்

சர்வதேச மட்டத்தில் வட மாகாண வீரர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவிருக்கின்றேன் அதன் முதற்கட்டமாக இந்திய வீரர்களும் வட மாகாண வீரர்களும் பங்கேற்கும் போட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றேன் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற வட மாகாண விளையாட்டுவிழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சிறந்த ஆரம்பத்துடன் தொடங்கிய வட மாகாண விளையாட்டுவிழா நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவெள்ளியாக இருக்கும் எனக்கருதுகின்றேன். இந்த மகிழ்ச்சி நீண்டதாகவும் நிலையானதாகவும் இருக்கவேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும் என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக