
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டாம் சுற்று வாக்கு எண்ணுவதற்கான தேவை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் ஜனாதிபதி யார் என்பதனை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையானவாறு ஜனாதிபதி செயற்பட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.
ஜனாதிபதியை தோற்கடிக்கும் எண்ணத்தைத் தவிர வேறும் எந்தவொரு திட்டங்களும் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.
பாணந்துறை நகரசபைத் தலைவர் நந்தன குணதிலக்க கட்சியை வட்டு விலகியமை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி பாணந்துறைப் பகுதியில் கூட பிரச்சினையை ஏற்படுத்தாது.
ஆளும் கட்சியில் போட்டியிட்ட காரணத்தினால் நந்தன குணதிலக்க வெற்றியீட்டியதாகவும் சுயாதீனமாக போட்டியிட்டிருந்தால் வெற்றியீட்டியிருக்க முடியாது எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக