வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்!!

விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஏற்கனவே இறுதிப்போரின் போது இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட பொட்டு அம்மான்,  தற்போது ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.

இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் என்றும்
இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது.

எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக