வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்போது சிவாஜிலிங்கம் 3 பிரேரணைகளை கொண்டுவந்தார். அதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் அத்துடன் வெளிநடப்பும் செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் கூறி சபையில் இருந்து
வெளியேறினர். இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரயீஸ் சபையில் ஆதரவு தெரிவித்து அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியேறினர். இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரயீஸ் சபையில் ஆதரவு தெரிவித்து அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக