வியாழன், 21 ஆகஸ்ட், 2014

யாழ். மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு வண்டி!!

யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று வழங்கப்படவுள்ளதாக முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ். மாநகர சபையில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் தீயணைப்பு வண்டி உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லாவினால்
தீயணைப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கல்முனை மாநகர சபைக்கும் அதாவுல்லாவினால் தீயணைப்பு வண்டி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக