வியாழன், 3 ஜூலை, 2014

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு...!!

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. நேற்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக மாணவர்கள் வெளியேற வேண்டுமென பல்கலைககழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகத்தை கால வரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் பணிகளை தொடர முடியாது என விரிவுரையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.



அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை பணயமாக வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக