வியாழன், 3 ஜூலை, 2014

அனுமதிப் பத்திரத்தை பெற்று விலங்கு பலி பூஜையை நடத்தலாம் பிரதம நீதியரசர்..!!!

உரிய அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட பின்னர், விலங்கு பலி பூஜைகளை நடத்த இடமளிக்க முடியும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சிலாபம், முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த விலங்கு பலி பூஜைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி காளியம்மன் ஆலய தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே மொஹான் பீரிஸ் அனுமதிப் பத்திரம் பெற்று பலி பூஜையை நடத்த இடமளிக்கலாம் கூறியுள்ளார்.

எனினும் அனுமதிப் பத்திரத்தை பெற்று விலங்குகளை பலியிடும் பூஜை நடத்த இடமளிப்பதை தாம் எதிர்ப்பதாக தேசிய சங்க சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் பஸ்ஸரமுல்லே தயாவங்ஸ தேரர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக