வியாழன், 3 ஜூலை, 2014

பரந்தன் சந்தியில் சாரதியான குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு....!!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்துநேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கண்டி பல்லேகல பகுதியைச் சேர்ந்த ஆர்.பிரசாத் வயது 35 மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கனரக வாகனங்களை ஓட்டும் சாரதியாக பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில் பரந்தன் பகுதியில் டிப்பர் (கனரக வாகனம்) அருகில் மரணமான நிலையில், இவர் கிடந்துள்ளார்.

இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலினடிப்படையில் பொலிஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக