சனி, 5 ஜூலை, 2014

வவுனியாவில் தேசிய இளைஞர் கபடி போட்டிகளை அமைச்சர் ரிசாத் பதுதீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்!!


இலங்கை தேசிய இளைஞர் மன்றமும் தேசிய இளைஞர் கழக சமேளனமும் இணைந்து நடாத்தும்  தேசிய கபடி போட்டிகள் இன்று 05.07  
சனிக்கிழமை காலை  10.00 மணியளவில் ஆரம்பமானது.

இன்றும் நாளையும் கபடிப்போட்டிகள் நடைபெற இருக்கின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்றைய முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிசாத் பதுதீன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாருக்,மாகாண சபை உறுப்பினர் செனவிரத்தன,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இன் நிகழ்வில் மாவட்ட  இளைஞர்
பிரதிநிதிகள்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கபடி போட்டிகளை அமைச்சர் ரிசாத் பதுதீன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.மேற்படி போட்டிகள் ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகின்றமை குறிப்பிட தக்கது.





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக