கொங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு பிராந்தியத்தின் கிராமமொன்றில் இடம்பெற்ற இனங்களுக்கு இடையிலான மோதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள், பெண்கள்; அடங்குவதாகவும் தேவாலயத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் பபிலிரு இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த தாக்குதலை யார் நடத்தினார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத போதும் இங்கு பபிலிரு மற்றும் பருண்டி சமூகங்களுக்கு இடையில் அண்மைக்காலமாக மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த இரு தரப்புக்கும் இடையில் கால்நடைகள் தொடர்பிலேயே மோதல் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட தெற்கு கிவு நகர ஆளுநர் மெர்சலின் சி'ம்போ, இங்கிருக்கும் அனைவரிடமும் ஆயுதம் இருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம் என்று தெரிவித்தார். இந்த தாக்குதலில் எட்டு ஆண்கள், 14 பெண்கள்;, 10 சிறுவர்கள் மற்றும் ஒரு பொலிஸார் கொல்லப்பட் டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் தெரி வித்தார். இதில் துப்பாக்கிச் சூடு கத்திக் குத்துக்கு இலக்காகியே இவர்கள் கொல் லப்பட்டுள்ளனர். அங்குள்ள வீடுகளும் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள், பெண்கள்; அடங்குவதாகவும் தேவாலயத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் பபிலிரு இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த தாக்குதலை யார் நடத்தினார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத போதும் இங்கு பபிலிரு மற்றும் பருண்டி சமூகங்களுக்கு இடையில் அண்மைக்காலமாக மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த இரு தரப்புக்கும் இடையில் கால்நடைகள் தொடர்பிலேயே மோதல் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட தெற்கு கிவு நகர ஆளுநர் மெர்சலின் சி'ம்போ, இங்கிருக்கும் அனைவரிடமும் ஆயுதம் இருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம் என்று தெரிவித்தார். இந்த தாக்குதலில் எட்டு ஆண்கள், 14 பெண்கள்;, 10 சிறுவர்கள் மற்றும் ஒரு பொலிஸார் கொல்லப்பட் டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் தெரி வித்தார். இதில் துப்பாக்கிச் சூடு கத்திக் குத்துக்கு இலக்காகியே இவர்கள் கொல் லப்பட்டுள்ளனர். அங்குள்ள வீடுகளும் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக