திங்கள், 9 ஜூன், 2014

கனடாவில் மூன்று கைதிகள் ஹெலி மூலம் தப்பியோட்டம்...!!!!

கனடாவில் மூன்று கைதிகள் ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்திய சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

கியுபெக் மாகாணத்தில் இருக்கும் ஒர்செயின் வில்லே தடுப்பு மையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை இந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர். யிவஸ் டெனிஸ், டெனிஸ் லெபப்ரே மற்றும் செர்Nஜ பெமர்லிவ் ஆகிய கைதிகளை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தப்பிச்சென்ற ஹெலிகொப்டர் நாட்டின் மேற்குப் பகுதியை நோக்கி பறந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து மேலும் தகவல் அளிக்க அவர்கள் மறுத்துள்ளனர்.


கடந்த ஆண்டு கனடாவின் மொன்ட்ரியல் நகரில் இரு சிறைக்கைதிகள் மரமொன்றின் மீது ஏறி ரோந்து செல்லும் ஹெலியில் பாய்ந்து சினிமா பாணியில் தப்பிச் சென்றிருந்தனர். எனினும் இந்த கைதிகள் மீண்டும் பிடிபட்டதோடு இவர்களுக்கு உதவி செய்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக