செவ்வாய், 13 மே, 2014

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE) அமைப்பின் விசேட பொதுக்கூட்டம் !!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில்..... 

எமது கழகத்தின் விசேட பொதுக்கூட்டத்தை ஜூன் முற்பகுதியில் நடாத்த கட்சியின் உயர் மட்டம் முடிவு செய்துள்ளது. 

இன்று இருக்கின்ற அரசியல் சூழ் நிலையில் எங்களுடைய கட்சியின் நிர்வாக கட்டுமானங்களை கட்டமைக்க வேண்டிய கடப்பாடும், கட்சியை பலப்படுத்த வேண்டியதொரு தேவையும், கட்சியின் வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டியதன் அவசியமும் எமக்கு இருக்கின்ற காரணத்தினால் கட்சியினுடைய பொதுக்கூட்டத்தை எதிர்வரும் ஜூன் முற்பகுதியில் நடாத்த உத்தேசித்துள்ளோம்.

எமது கட்சியின் இந்த பொதுக்கூட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது கட்சியின் தோழர்கள் பங்குபற்ற வேண்டும்மென்று நாம் விரும்புகின்றோம் . வெளிநாடுகளில் உள்ள எமது கட்சியின் கிளைகளை   பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் எமது பொது கூட்டத்தில் கலந்து கொள்வதை நாம் பெரிதும் விரும்புகின்றோம்.

எனவே எமது புலம்பெயர் தோழர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுகொள்வதாக கட்சியின் தலைவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக