
தெரிவித்திருக்கின்றார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காகச் செல்வோரின் மனித உரிமை நிலைவரம் மற்றும் அவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
"இவ்வாறு வெளிநாட்டில் பணிபுரிவோரின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. தொழிலாளர் விடயத்தில் 24 வீதத்தையும், நாட்டுக்கான அந்நியச் செலாவணி வருமானத்தில் 33 வீதத்தையும் நாட்டின் மொத்தத் தேசிய விருத்தியில் 8.3 வீதத்தையும் இந்தப் பிரிவினரே வகிக்கின்றனர்" - என்கிறார்.
அவர் தமது இலங்கை விஜயத்தின் போது இங்கு தங்கியிருக்கும் 8 நாட்களிலும் அரச அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான தரப்பினர்கள், சிவில் சமூகத்தினர் என பல தரப்பினருடனும் விரிவான பேச்சுக்களை நடத்துவார். 2015 ஜுன் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வின்போது அவர் இலங்கை குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக