
ஐ.நா. அமைதிப்படையின் தலைவராக முதன்முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வே நாட்டின் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கிறிஸ்ரின் லண்ட் என்பவரே ஐ.நா. அமைதிப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லெபனான், பொஸ்னியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் நடத்தப்பட்ட போர்களிலும், வளைகுடா யுத்தத்திலும் பங்கெடுத்தவர். கிழக்கு மத்திய தரைக்கடல் தீவு நாடான சைபிரஸில் நிலைகொண்டுள்ள சுமார் ஆயிரம் அமைதிப்படை வீரர்களுக்கு வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி முதல் இவர் தலைமை வகிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக