புதன், 14 மே, 2014

சித்திரவதை மூலம் குற்ற ஒப்புதல்; இலங்கையில் தொடர்கின்றது என மன்னிப்புச் சபை தெரிவிப்பு!!

நீதிமன்ற விசாரணைக்கு முன்னான தடுப்புக் காவலின்போது, தடுத்து வைக்கப்பட்டிருப்போரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யவைப்பதற்கான வழிவகையாக பொலரிஸாரினால் சித்திவதை மேற்கொள்ளப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் சர்வதேச மன்னிப்புச் சபை பட்டியலிட்டிருக்கின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சீனா, பிஜி, இந்தோனேசியா, மலேசியா,
மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் தனியாட்களை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக தடுப்புக் காவலில் வைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கான வழிவகையாக சித்திரவதையை பொலிஸார் பயன்படுத்துகின்றர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 2013 இன் முதல் காலாண்டில்மட்டும் இத்தகைய சித்திரவதைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 86 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிக மோசமான துஷ்பிரயோகத்தை அடுத்து கைதிகள் உயிரிழந்தும் உள்ளனர் - என்றும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக