புதன், 14 மே, 2014

யாழில் தொடரும் தற்கொலைகள்!!

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வேறு தூக்குச் சம்பவங்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சாவடைந்துள்ளனர்.

அதன்படி நீர்வேலிப்பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு பிள்ளையின் தந்தையான யோகராசா ஜெகதீஸ் ( வயது 23) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளளனர்.


எனினும் சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சாவு குறித்த விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாணிக்கம் வீதி இணுவில் பகுதியில் இன்று காலை 7மணியளவில் திருச்செல்வம் நேத்திரி (வயது 19) என்ற யுவதி தூக்கிட்டு சாவடைந்துள்ளார்.

அலாயன்ஸ் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். குறித்த யுவதி தனது அம்மம்மாவுடனேயே வசித்துவந்துள்ளார். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத வேளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் சாவுக்கான காரணம் தெரியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக