புதன், 14 மே, 2014

துருக்கியில் சுரங்க விபத்து; 200 பேர்வரை பலி!!

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 201 பேர் வரை உயிரிழந்தனர். 300க்கு மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 787 பேர் வரையில் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். கிழக்குத் துருக்கியின் சோமானகரில்
உள்ள நிலக்கரி சுரங்கத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து குறித்து விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக