புதன், 14 மே, 2014

பல கோடி ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பறிமுதல்......!!!!!!!

120 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த சொத்துக்களை மீட்டுள்ளனதாக செய்தி வெளியிட்டுள்ளது.

போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் புலிகள் சொத்துக்கள் பாரியளவில்
மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்தில் சொசுகு தொடர்மாடி வீடுகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணிகள், ஆடைக் கைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள்,  ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் எப்போது கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக