பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள பய்டோவா நகரில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூத்த அதிகாரி ஒருவர் வந்த டிரக்கை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு 6 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு உடலை சம்பவ இடத்தில் இருந்து உறவினர்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் ஷெபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஷெபாப் தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட பய்டோவா நகரம், தற்போது ஆப்பிரிக்க ஒன்றிய படையினரின் ஆதரவுடன் கூடிய அரசு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால் சமீபகாலமாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் படைகளை குறிவைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது.
மூத்த அதிகாரி ஒருவர் வந்த டிரக்கை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு 6 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு உடலை சம்பவ இடத்தில் இருந்து உறவினர்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் ஷெபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஷெபாப் தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட பய்டோவா நகரம், தற்போது ஆப்பிரிக்க ஒன்றிய படையினரின் ஆதரவுடன் கூடிய அரசு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால் சமீபகாலமாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் படைகளை குறிவைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக