பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள, பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என்று தெரியவந்துள்ளதாக, பிரித்தானிய ஊடகமான 'இன்சைட் த கேம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. வரும் ஜுலை 23 ஆம் திகதி பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகவுள்ளன.
தற்போது பொதுநலவாய அமைப்பின் தலைவராக இலங்கை ஜனாதிபதி இருப்பதால், அவரும், பிரித்தானிய மகாராணியும் இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை ஜனாதிபதி கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இனப்படுகொலை மற்றும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சர்ச்சைக்குரிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, இந்த விழாவில் பங்கேற்பதற்குக் கவலை தெரிவித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கிற்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதலாவது கடிதத்தை தொழிற்கட்சியை சேர்ந்தவரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர், கடந்த 9 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதால், இந்த விளையாட்டு நிகழ்வு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க என்ன திட்டங்களை பிரித்தானிய அரசு வைத்துள்ளது என்று அறியத் தாம் விரும்புகின்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்றால், கிளாஸ்கோ தெருக்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் என்பதால், அதற்கு காவல்துறை தயார்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை, நேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும் மற்றொரு கடிதம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதங்கள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், எதிர்பார்க்கப்படுவது போலவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்காது போனால், ஏற்பாட்டாளர்களுக்குப் பெரும் நிம்மதியாக இருக்கும். அவர்களின் கவலைகளில் ஒன்று குறையும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பொதுநலவாய அமைப்பின் தலைவராக இலங்கை ஜனாதிபதி இருப்பதால், அவரும், பிரித்தானிய மகாராணியும் இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை ஜனாதிபதி கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இனப்படுகொலை மற்றும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சர்ச்சைக்குரிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, இந்த விழாவில் பங்கேற்பதற்குக் கவலை தெரிவித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கிற்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதலாவது கடிதத்தை தொழிற்கட்சியை சேர்ந்தவரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர், கடந்த 9 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதால், இந்த விளையாட்டு நிகழ்வு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க என்ன திட்டங்களை பிரித்தானிய அரசு வைத்துள்ளது என்று அறியத் தாம் விரும்புகின்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்றால், கிளாஸ்கோ தெருக்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் என்பதால், அதற்கு காவல்துறை தயார்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை, நேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும் மற்றொரு கடிதம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதங்கள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், எதிர்பார்க்கப்படுவது போலவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்காது போனால், ஏற்பாட்டாளர்களுக்குப் பெரும் நிம்மதியாக இருக்கும். அவர்களின் கவலைகளில் ஒன்று குறையும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக