இலங்கை விவசாய சேவைக்கு தமிழ் மொழி மூலமானவர்கள் உள்வாங்கப்படாமையினால், பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ் மொழிமூல விவசாய சேவைக்கு தகுதியுடையோர் அலுவலர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அச் சங்கம் தெரிவித்துள்ளதாவது, இலங்கை விவசாய சேவையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் 52 தொடக்கம் 70 வெற்றிடங்கள்
காணப்படுகின்றன.
எனினும் போட்டி பரீட்சைக்கு பல தடவை தோற்றியவர்கள் கூட இதுவரை உள்வாங்கப்படாததுடன், நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றும் அவர்கள் தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது.
குறிப்பாக ஆராச்சி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர், விவசாய விரிவுரையாளர், விவசாய பொருளியலாளர் ஆகிய வெற்றிடங்களே காணப்படுகின்றன.
தற்போது இவ் வெற்றிடங்களை ஏனைய பதவியில் உள்ள உத்தியோகத்தர்கள் பதில் கடமையாக செயற்படுத்தி வருகின்றனர். எனினும் அவர்களுக்கு பதில் கடமைக்கான வேதனங்கள் வழங்கப்படாத நிலையில் பெரும் வேலைச் சுமை காணப்பட்டு வருகின்றது.
இதேவேளை 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 300 மேற்பட்டோர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ள போதிலும் 11 பேர் மாத்திரமே இச் சேவையினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மற்றும் குண்டகசாலை விவசாய கல்லூரியில் 14 தமிழ் வரிவுரையாளர்கள் தேவையான நிலையில் 5 விரிவுரையாளர்களே உள்ளமையால் அங்கு கற்கும் தமிழ் மாணவர்கள் போதுமான விரிவுரையாளர்கள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆராச்சி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் இன்மையால் வடக்கு, கிழக்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள இச் சங்கம் இவ் விடயம் தொடர்பாக மத்திய மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர், பொது நிர்வாக அமைச்சு உட்பட விவசாய திணைக்கள் அதிகரிகளுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்
இது தொடர்பில் அச் சங்கம் தெரிவித்துள்ளதாவது, இலங்கை விவசாய சேவையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் 52 தொடக்கம் 70 வெற்றிடங்கள்
காணப்படுகின்றன.
எனினும் போட்டி பரீட்சைக்கு பல தடவை தோற்றியவர்கள் கூட இதுவரை உள்வாங்கப்படாததுடன், நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றும் அவர்கள் தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது.
குறிப்பாக ஆராச்சி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர், விவசாய விரிவுரையாளர், விவசாய பொருளியலாளர் ஆகிய வெற்றிடங்களே காணப்படுகின்றன.
தற்போது இவ் வெற்றிடங்களை ஏனைய பதவியில் உள்ள உத்தியோகத்தர்கள் பதில் கடமையாக செயற்படுத்தி வருகின்றனர். எனினும் அவர்களுக்கு பதில் கடமைக்கான வேதனங்கள் வழங்கப்படாத நிலையில் பெரும் வேலைச் சுமை காணப்பட்டு வருகின்றது.
இதேவேளை 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 300 மேற்பட்டோர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ள போதிலும் 11 பேர் மாத்திரமே இச் சேவையினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மற்றும் குண்டகசாலை விவசாய கல்லூரியில் 14 தமிழ் வரிவுரையாளர்கள் தேவையான நிலையில் 5 விரிவுரையாளர்களே உள்ளமையால் அங்கு கற்கும் தமிழ் மாணவர்கள் போதுமான விரிவுரையாளர்கள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆராச்சி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் இன்மையால் வடக்கு, கிழக்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள இச் சங்கம் இவ் விடயம் தொடர்பாக மத்திய மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர், பொது நிர்வாக அமைச்சு உட்பட விவசாய திணைக்கள் அதிகரிகளுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக