
எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள
அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள ஒரு நாடு. அந்த வகையில் இங்கு யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் வீடுகள் மற்றும் 200 பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக அவ்வப்பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர்கள் நியோமால் பெரேரா, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக