சனி, 10 மே, 2014

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது !!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வியாழக் கிழமை ஆறு படகுகளுடன் 30 இலங்கை மீனவர்கள் ஆந்திரா பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக