சனி, 10 மே, 2014

பூசையில் ஈடுபட்டவர்கள் மீது குளவி தாக்குதல்: 30 போ் வைத்தியசாலையில் அனுமதி!!

ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கோயாவில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை ஒன்றில் கலந்து கொண்டவர்களே இன்று காலை 11.30 மணியளவில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஆலய யாக பூசையின் போது கிளம்பிய புகை ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டில் பரவியதால், குளவி கூடு கலைந்து பூசையில் ஈடுபட்டிருந்தவர்களின் மீது இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதில் சிலருக்கு பெரும் பாதிப்பு இல்லையெனவும் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் சிறுகுழந்தை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக