டெலொ அமைப்பின் முன்னை நாள் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன் அவர்களின் நினைவு தினம் இன்று (15/05) நடைபெற்றது.

'பூர்வீகம் செய்திகளுக்காக குருமண்காட்டிலிருந்து வன்னியன்'
இந் நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் நடைபெற்றது. திருவுருவப்படத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தோழர் குகன் அவர்களின் தாயார், குடும்பத்தினர் உறவினர்கள், கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக