வியாழன், 7 அக்டோபர், 2010

இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 352 ஆகக் குறைந்தது..!

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகள் காரணமாக முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நேற்றுக்காலை 23 ஆயிரத்து 352 ஆகக் குறைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களிலும் இப்போது 22ஆயிரத்து 194பேர் மட்டுமே தங்கியூள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1158 பேர் உள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரையில் 60ஆயிரம் குடும்பயங்களைச் சோந்த 2லட்சம் பேரை மீள்குடியேற்றம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக