தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் எந்தவிதமான சந்திப்புக்களையும் நடாத்துவதில் அர்த்தமில்லை என மனோ கணேசன்இ ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். கட்சியையும் தமிழ் மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை ஏமாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவினால்இ மனோ கணேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நோக்கத்திற்காக மட்டும் ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சுயலாப நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைய நடவடிக்கைகளை தமது கட்சி உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரமளவில் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும்இ ஜனநாயக மக்கள் முன்னணி பாராளுமன்றில் சுயாதீனமான ஓர் அலகாக செயற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக