சனி, 15 மே, 2010

இவ்வாரத்தில் 1200 பேரை மீள் குடியமர்த்த நடவடிக்கை - அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்..!!

இவ்வாரத்தில் 1200 பேரை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை மீள் குடியேற்றும் பணிகள் துரிதப்படுத்தி உள்ளதாகவும் அதற்கிணங்க இவ்வார இறுதிக்குள் மேலும் 1200 பேரை மீள் குடியேற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் கடந்த புதன் கிழமை 540 பேர் மீள்குடியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக