சனி, 20 பிப்ரவரி, 2010

குருத்தணு அடிப்படையில் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்: ஆராய்ச்சியாளர் நம்பிக்கை..!

நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை அடுத்த 10- 12 ஆண்டுகளில் கிடைத்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஸ்டெம் செல் எனப்படுகின்ற குருத்தணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிதியங்களில் உலகிலேயே மிக அதிக பணபலம் மிக்க நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
குருத்தணு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.
மனிதக் கருவின் குறுத்தெலும்பைப் பயன்படுத்தி இன்சுலின் சுரக்கும் உயிரணுக்களை உருவாக்கி, அந்த செயற்கை உயிரணுக்களை ஜவ்வுப் பை ஒன்றுக்குள் வைத்து நோயாளியின் உடலுக்குள் பொருத்துகிற ஆராய்ச்சியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுவருகிறது என்று பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குருத்தணு மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் எலிகளின் உடலில் பொருத்தப்பட்டபோது அவை பலன் தந்துள்ளதாக பரிசோதனைகள் காட்டுகின்றன. மனிதர்களுக்கு இவ்வகையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவதாக அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.
ஆனால் குருத்தணுவின் மருத்துவ பலன்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பாக பார்க்கின்சன்ஸ் போன்ற சில நோய்களை குருத்தணு அடிப்படையில் குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கைகள் வற்றிப்போய்விட்டன என்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக