சனி, 20 பிப்ரவரி, 2010

ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு வீரர்கள் இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து வெளியேறியுள்ளனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் 30பேர் இந்தியாவில் பயிற்சி முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர் இவர்களுக்கு ஹரியானா பொலிஸ் கல்லூரியில் இரண்டு மாதகால பயிற்சிகள் வழங்கப்பட்டன இவர்கள் இலங்கையின் உதவி பொலிஸ் அதிகாரிகள் முதல் பொலிஸ் அத்தியட்சகர் வரையிலான தரங்களை கொண்டவர்களாவர் இந்நிலையில் நட்புநாடு என்ற அடிப்படையில் இவர்களுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கியுள்ளது. மேலும் இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஹரியானா மாநில பொலிஸ் அதிகாரி ரஞ்சீவ் தலாய் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக