ஞாயிறு, 20 டிசம்பர், 2009

யாராவது பிரபாகரனின் கன்னத்தில் அறைந்தனரா?.. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் நந்திக்கடல் களப்பிலிருந்தே மீட்கப்பட்டது -சவேந்திர சில்வா !

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் சடலம் நந்திக்கடல் களப்பிலிருந்தே மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். போர் களத்தில் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டது இரகசியமானதல்ல. இதனால், பிரபாகரனின் முடிவு எப்படி இருந்தது, அவர் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டாரா?, அவரை யாராவது கன்னத்தில் அறைந்தனரா?, அல்லது தலைப்பகுதி மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டத?, அவரது தலை கொழும்பில் இருக்கின்றதா? போன்ற கேள்விகளை என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணுகிறேன். அரசாங்கமும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலனாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகிடைத்தது. பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். தமது படைப் பிரிவினர் புலிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்துவதற்காக 203 கிலோமீற்றர்கள் பயணித்ததாகவும் சவீந்திர சில்வா கூறியுள்ளார். வன்னி இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினர் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்கினர் என்பதையும் சவேந்திர சில்வா இதன்போது விளக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக