திங்கள், 19 ஜனவரி, 2015

வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை அரசாங்கம்..!!!

தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.

எனினும் அதில் உண்மையில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று மல்வத்த மகாநாயக்கரை சந்தித்தபோது அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக