வெள்ளி, 16 ஜனவரி, 2015

14 அமைச்சர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்..!!

14 அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தத்தில் இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌத்த சாசனம், நீதி, ஊடகத்துறை, சுகாதாரம், அரச பாதுகாப்பு, இளைஞர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரம், துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள், சிவில் விமான சேவை, கலாச்சார மற்றும் கலை விவகாரம், பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்.


புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தை அமுல்படுத்த அண்மையில் அமைச்சரவையை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக