ஞாயிறு, 9 நவம்பர், 2014

திருகோணமலை, வெருகலில் பௌத்த பிக்குவின் ஆக்கிரமிப்பு..!!

திருகோணமலை, வெருகல் கல்லடி கிராமத்தில் பல வருடங்களாக தமிழர்களால் முன்பள்ளியாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பௌத்த விகாரையின் புனரமைப்புக்காக குறித்த கட்டிடம் தேவை என்று கூறியே பௌத்த பிக்கு பிரச்சினையை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்பள்ளிக்கு கடந்த வெள்ளிக்கிழமையும் வழமையாக தமது பிள்ளைகளை கூட்டிச்சென்ற பெற்றோரை உள்ளே செல்லவிடாது குறித்த பிக்கு வாசலை மறித்து பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.

குறித்த கட்டிடம் பௌத்த விகாரைக்கு உரியது என்றும் அவர் உரிமை கோரியுள்ளார்.

இதனையடு;த்து பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பிக்குவின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கட்டிடம், பௌத்த விஹாரைக்கு உரியது அல்ல என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


இதன்போது வெருகல் பொலிஸ் மற்றும் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொதுமக்களுடன் முரண்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக