தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கல்முனையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
நாளை காலை இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவெளியின் பின்னர் இரு கட்சிகளினதும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறிமுறைமை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால தேர்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் இரண்டு கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், எங்கு எப்போது என்பது பற்றிய தகவல்கள் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை.
நாளை முற்பகல் கல்முனையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை காலை இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவெளியின் பின்னர் இரு கட்சிகளினதும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறிமுறைமை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால தேர்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் இரண்டு கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், எங்கு எப்போது என்பது பற்றிய தகவல்கள் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை.
நாளை முற்பகல் கல்முனையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக