சனி, 2 ஆகஸ்ட், 2014

இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் தொடர்பில் நவிபிள்ளையின் நிலைப்பாடு என்ன ஹெல உறுமய...!!!

இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காஸா நிலப்பரப்பில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் நவனீதம்பிள்ளை தனது கருத்தை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுகின்றனவா? பலஸ்தீனத்தில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றனவா? என்பது குறித்து நவனீதம்பிள்ளை தெளிவாக விளக்க வேண்டும்.

உக்ரேய்னில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க்குற்றச் செயல் என நவனீதம்பிள்ளை திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

எனினும், பலஸ்தீன சம்பவங்கள் குறித்து நவனீதம்பிள்ளை மௌனம் காத்து வருகின்றார்.


பலஸ்தீன இஸ்ரேல் மோதல்களில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறவில்லையா என கேள்வி எழுப்புகின்றோம்

பலஸ்தீன விவகாரத்தில் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக