
கல்கமுவ என்ற இடத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் சிறுவன் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுவனை கடத்தியவர்கள் யார் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த சம்பவமானது நாட்டில் துஸ்பிரயோகங்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாக ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு ஜனாதிபதி முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
17வது அரசியலமைப்பு ரத்துச்செய்து பொலிஸ்துறையை அரசாங்கத்தின் அங்கமாக ஆக்கிக்கொண்டமையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக