வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இரண்டு கிரனேட்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள அலகல்ல சீர்வேகம குளத்தை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பையில் சுற்றப்பட்டிருந்த இரண்டு
கிரனேட்டுக்களை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பொலிஸாருடன் வந்த விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றின் உத்தரவுக்கமைய இந்த இரு கைக்குண்டுகளையும் மீட்டு செயலிழக்கச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக