வவுனியா திருநாவற்குளத்தில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களில் ஒருவரான அமரர் தோழர் இளங்கோ அவர்களின் ஞாபகார்த்த பேரூந்து தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(02/08) மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்
கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்கள். அமரர் தோழர் இளங்கோ அவர்களின் புதல்வன் செல்வன் லதுர்ஜன், சகோதரி திருமதி சிவபதி கனகேஸ்வரி, மற்றும் மருமக்களான சிவபதி துசியந்தன், பிரான்சிஸ் கேர்சோன் ஆகியோருடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உறுப்பினர்களும், இளைஞர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக